மதுரை, தேனி, சென்னை என பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சுமார் 70க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் நேற்று முன்தினம் (ஜன. 26) சக மாணவர்களை சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் இது போன்ற இணைப்பு நிகழ்ச்சி நடத்திய போது பெரிதாக யாரும் வரவில்லை என்றும் இன்று 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இல்ல விழாவில் கலந்து கொண்டுள்ளது போல இருந்தாக தெரிவிக்கின்றனர்.
மேலும் பள்ளியின் வளர்ச்சிக்கும் தங்களுடன் பயின்று வறுமையில் வாடும் சக முன்னாள் மாணவர்களுக்கும் உதவி செய்து அவர்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்நிகழ்வை நடத்தியதாகவும், இன்னும் சில மாணவர்களை தேடிக் கொண்டிருப்பதாகவும், சில இறந்திருந்தாலும், 1974ல் தங்களுடன் பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைக்க முயற்சியும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.