மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 20) வெளியாக உள்ள நிலையில், மதிப்பெண்கள் குறைவாக வந்துவிடுமோ என்ற அச்சத்தில் வீட்டில் தனியாக இருந்த மாணவன் அஸ்வின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.