மதுரை: மகள் இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

மதுரை மாவட்டம் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் மனைவி ஈஸ்வரி (42), ஐந்து மாதங்களுக்கு முன்பு மகள் சந்தியா இறந்ததிலிருந்து மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஏழுமலை போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி