மதுரை உசிலம்பட்டி தொகுதிக்குட்பட்ட நல்லதாது நாயக்கன்பட்டி கிராமத்தில் மின்விளக்கு வசதி இல்லாததால் பொதுமக்கள் சமூக ஆர்வலர் வழக்கறிஞர் இளமகிழனிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, வழக்கறிஞர் இளமகிழன் மின்வாரிய அதிகாரிகளுடன் பேசி, தனது சொந்த நிதியிலிருந்து சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்பில் மின்விளக்குகள் அமைத்துத் தந்தார். கிராம மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். இளமகிழன் திமுக பொதுக்குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.