மதுரை: யாசகம் பெற்று முதல்வர் நிதிக்கு ரூ.10,000 வழங்கல்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன் யாசகம் பெற்று, அந்தப் பணத்தை பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கி வந்துள்ளார். 2020 கொரோனா காலத்தில் மதுரையில் தங்கியிருந்தபோது, யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கத் தொடங்கினார். இதுவரை சுமார் 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். தற்போது புற்றுநோய் பாதிப்பால் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள தமிழர்கள் வழங்கிய 10,000 ரூபாயை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி