சிலைமான் அருகே பெண் கொலை.

மதுரை ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிலைமான் அருகே சி. ஆர். தோப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு நேற்று காலை பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக அந்தப் பகுதி மக்கள் சிலைமான் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் அங்கு சென்று பார்த்த போது, மோட்டார் அறை அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலை, கையில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அந்த பெண் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து சிலைமான் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் பேசிய போது கொலையானவர் வெளியூர் நபராக இருக்கலாம். இங்கு அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம். மேலும் கொலை நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி