திருநகர்: சுகாதார பணியாளர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை திருநகர் அருகே திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த முனியாண்டிசாமியின் மகன் குருபாண்டி (30) என்பவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தற்காலிக சுகாதாரப் பணியாளராக வேலை பார்த்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. 

இதனால் கால் விரலில் புண் தோன்றியதால் வலி தாங்க முடியாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனமுடைந்த குருபாண்டி நேற்று (ஜன. 2) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சுந்தரவல்லி திருநகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி