மதுரை: நீதிமன்ற உத்தரவை மதிக்காத சுங்கச்சாவடி நிர்வாகம்

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலைகளை சீரமைக்க மற்றும் இரு புறங்களிலும் மரங்களை நட்டு வாகன ஓட்டிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க தடை விதிக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவை நேற்று (ஜூன் 3) பிறப்பித்தனர். 

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மலைராஜ் என்பவர் மதுரையில் இருந்து எலியார்பத்தி சுங்கச்சாவடி வழியாக வந்து கொண்டிருந்தார். நான்கு வழிச்சாலைகள் தரமற்று இருப்பதால் சுங்க கட்டணம் கட்டுவதற்கு தடை விதித்த நிலையில் சுங்கச்சாவடியை கடக்க முயன்றபோது தடுப்பு அவரது கார் மீது பட்டதால் கார் கண்ணாடி உடைந்தது. இது குறித்து மலைராஜ் சுங்கச்சாவடி நிர்வாகத்திடம் கேட்டபோது உயர்நீதிமன்ற உத்தரவு நகல் எங்களிடம் வரவில்லை என்பதால் நீதிமன்ற உத்தரவு வரும் வரை நாங்கள் சுங்க கட்டணம் வசூலிப்போம் என அட்டாவடியாகத் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி