மேலும் தனது அண்ணன் மகன் பெயரில் பட்டா வழங்கியுள்ளார். மேலும் பலருக்கு பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக பட்டா வழங்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தனர். அதன் பேரில் கடந்த 28.3.2024 அன்று வருவாய் கோட்டாட்சியர் ராஜகுரு விசாரிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் ராஜகுரு விசாரணை செய்து விஓ கந்துவேல் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் உச்சபட்டிக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் விஏஓ கந்துவேல் 15 நாள் விடுமுறை அளித்து சென்றதால் தற்போது புதிதாக பொறுப்பு விஏஓ ராஜாங்கம் பொறுப்பு தலையாரி முருகன் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் நிலையூர் 1பீட் மயானத்தில் இன்று (ஏப்.4) காத்திருப்பு போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர். இதை அறிந்து வந்த ஆஸ்டின்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.