மதுரை: கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்த எம்எல்ஏ (VIDEO)

மதுரை திருப்பரங்குன்றம் அருகே விளாசேரியில் தமிழ் செம்மொழியாக முதன் முதலாக குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞரின் 155வது பிறந்த தின விழா (ஜூலை 6) கொண்டாடப்படுகிறது. தமிழ்மொழியின் தொன்மையும் கலாச்சாரத்தையும் உலகிற்கு எடுத்துச் சொல்ல சூரிய நாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என தமிழில் மாற்றி நிறைய தமிழ் நூல்கள் எழுதியுள்ளார். 

அவரை போற்றும் விதமாக தமிழக அரசு சார்பில் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அரசு விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். பரிதிமாற் கலைஞரின் 155வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பரிதிமாற் கலைஞர் சிலைக்கு அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்புடைய செய்தி