இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் கூறியதாவது: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. அதன் அடிப்படையில் பாஜக நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த இளைஞர்கள் 5000 பேர் ராமநாதபுரம் சமஸ்தானம் இளைய மன்னர் ஆதித்யா சேதுபதி தலைமையில் பாஜகவில் இணைகிறார்கள். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதன் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் இருக்கும். தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம் இளைஞர்கள் மத்தியில் உருவாகியுள்ளது என்றார்.
விண்வெளியின் பிரம்மாண்டம்: சூரியனின் அளவு இவ்ளோ பெருசா?