மதுரை: இளம் பெண் மாயம்; போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகள் ஆதிலட்சுமி (19) என்பவர் திருப்பரங்குன்றம் அருகே தோப்பூரில் வசிக்கும் உறவினர் முத்துவேல் என்பவர் வீட்டில் தங்கி வருகிறார். இவர் கடந்த 26 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து இவரது தந்தை பாலசுப்பிரமணியன் ஆஸ்டின்பட்டி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் (நவ. 27) புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி