இது குறித்து கீரைத்துறை, அவனியாபுரம் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் வில்லாபுரம் பகுதியில் போதையில் கார், இருசக்கர வாகனங்களை உடைத்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்