மதுரை: கார், ஆட்டோ உடைத்து டூவீலரை எரித்த சம்பவத்தால் பரபரப்பு

மதுரை அருகே வில்லாபுரம் பகுதியில் உள்ள அகஸ்தியர் தெருவில் இரு ஆட்டோக்களுக்கு கண்ணாடிகள் உடைக்கப்பட்டும், ஒரு பைக் தீவைத்து எரிக்கப்பட்டது. இதேபோல் கீரைத்துறை அம்பேத்கர் நகர் பகுதியில் ஒரு பைக், ஆட்டோ, இரண்டு கார்கள் ஆகியவற்றின் கண்ணாடிகள் நேற்று (மார்ச் 30) இரவு உடைக்கப்பட்டன. 

இது குறித்து கீரைத்துறை, அவனியாபுரம் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு, போலீசார் வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் வில்லாபுரம் பகுதியில் போதையில் கார், இருசக்கர வாகனங்களை உடைத்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி காட்சி மூலம் கண்டறிந்து கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி