மதுரை அவனியாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2014-ல் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடைபெற்ற கொலை வழக்கில் குற்றவாளியான விஜயபாண்டி என்ற தினேஷ் (48) என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல்துறையினரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டினார்.