அடுத்தடுத்த காலங்களில் இந்த மழைநீர் வடிகால் பகுதி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கப்பட்டு, தற்போது முழுவதுமாக மழைநீர் வடிகாலை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் அரசு சார்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளையும், சாக்கடை கால்வாய்களையும் மூடப்பட்டுள்ளதால் மழைநீர் மற்றும் சாக்கடை கழிவுநீர் செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகம் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.