இந்நிலையில் கடந்த சில நாட்களாக மனவிரக்தியுடன் குழப்பத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (மார்ச் 12) மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்த தென்னை மரத்திற்கு வைக்கப்படும் மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி அளிக்க திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (மார்ச் 13) இரவு உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சோழவந்தான்
பக்தி பரவசத்துடன் பால்குடம், அக்னி சட்டி எடுத்த பக்தர்கள்