இந்நிலையில் (மார்ச் 21) காலை தோட்டத்திலுள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என நினைத்து மோட்டாரை இயக்கித் தண்ணீரை வெளியேற்றினர். தண்ணீர் பாதி வெளியேறிய போது கிணற்றினுள் தமிழ்ச்செல்வியின் உடல் இருந்ததைக் கண்டு உறவினர்கள் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் தமிழ்ச்செல்வியின் உடலை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தமிழ்ச்செல்வி கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என திருமங்கலம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்