மதுரையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோவில், திமுக ஆட்சியில் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாகவும், தகுதியுள்ள இளைஞர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, பணத்தால் மதிப்பீடு செய்யப்படும் காலம் நிலவுவதாகவும் குற்றம் சாட்டினார். நகராட்சி நிர்வாக அமைச்சர் நேருவின் சகோதரர் வாங்கிய கடன், 888 கோடி ரூபாய் ஊழல், டிஎன்பிசி தேர்வில் பணம் வாங்கிக்கொண்டு 2,538 பேர் அரசு பணியில் அமர்த்தப்பட்டது போன்றவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.