மதுரை: தலையில் அம்மிக்கல்லை போட்டு விஏஓவை கொல்ல முயற்சி

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா மேல உரப்பனூர் வி.ஏ.ஓ. முத்துப்பாண்டி, (45) பணியாற்றி வருகிறார். இந்நிலையில் திருமங்கலம் மம்சாபுரத்தைச் சேர்ந்த ராஜா முகமது, (45) இவரது மனைவி சம்ரத்பீவி, (42) இவர்களுக்கு ரபிக் முகமது, (19) மற்றும் 16 வயது மகன் ஆகியோர் உள்ளனர். இவர்களது குடும்ப பிரச்சினையால் சம்ரத்பீவி, தன் மகன்களோடு தனியாக வசித்து வருகிறார்.

 இந்நிலையில், இட பிரச்சினை தொடர்பாக வி.ஏ.ஓ., முத்துப்பாண்டியை சம்ரத்பீவி சந்தித்தபோது, வாய்வாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகவலறிந்த சம்ரத்பீவி மகன்கள், நேற்றுமுன்தினம் (மார்ச். 12) இரவு முத்துப்பாண்டி வீட்டிற்குச் சென்று பின்புறக் கதவை உடைத்து உள்ளே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, முத்துப்பாண்டி தலை மீது அம்மிக்கல்லை, ரபிக் முகமது போட்டுள்ளார். அங்கிருந்த வி.ஏ.ஓ., மனைவியின் அலறலைக் கேட்டு அருகில் வசித்தவர்கள், சகோதரர்களைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தற்போது வி.ஏ.ஓ மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி