மதுரை மாவட்டம் கள்ளிக்குடி புளியங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த 20 வயது மாணவி, கடந்த நவம்பர் 22 ஆம் தேதி டைப் ரைட்டிங் கிளாஸ் செல்ல விருதுநகர் சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை வில்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.