மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுஷா புரத்தை சேர்ந்த முத்துராஜா (43) என்பவர் சலவை தொழில் செய்து வந்தார். தனது மனைவி கனகவல்லியுடன் இருசக்கர வாகனத்தில் சாப்டூர் அருகே வண்டாரியில் உறவினர் வீட்டு நிகழ்வுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, மங்கள்ரேவ்-சேடப்பட்டி சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முத்துராஜா தலையில் பலத்த காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சேடப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.