மேலும் கிராமசபையில் பேருந்துவசதி, நத்தம் புறம்போக்கிற்கு புதிய பட்டா வழங்குவது, 100நாள் திட்டத்தில் உள்ள பிரச்சினைகள் பேசப்பட்டன. கம்பூர் ஊராட்சியில் பல்வேறு திட்டங்களுக்கு செய்யப்பட்ட வரவுசெலவு அறிக்கையும் கிராமசபையில் வாசிக்கப்பட்டது.
ஊராட்சி மன்ற தலைவர் கதிரேசன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய பொறியாளர் கணேசன் பார்வையாளராக கலந்து கொண்டார். பள்ளிஆசிரியர்கள், நியாயவிலைக்கடை , சுகாதாரத்துறை, அங்கன்வாடி, மகளிர் திட்டம்பணியாளர்கள் , காவல்துறை, உளவுத்துறையினர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஊராட்சி செயலாளர் வடிவேல் நன்றி கூறினார்.