மதுரை மாவட்டம் மேலூர் அருகே நா. கோவில்பட்டி கிராமத்தில் உள்ள நாவினிப்பட்டி ஊராட்சி மக்கள், தங்கள் கிராமத்தில், திடீரென தாக்குதல் நடத்தி காயப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய மேலூர் போலீசாரிடம் கோரிக்கை வைத்தனர். உரிய நடவடிக்கை இல்லாததால் இன்று (ஜன. 1) காலை மேலூரில் உள்ள டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.