மேலூர்: சட்ட விரோதமாக மணல் கடத்திய இருவர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் நேற்று (மார்ச் 26) கம்பாளிபட்டி பகுதியில் ரோந்து சென்ற போது அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய சந்திரனை (44) கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்தார். 

இது போல மேலவளவு வி.ஏ.ஓ., எழில் வேந்தன் அழகாபுரி கண்மாய் பகுதியில் ரோந்து சென்ற போது டிராக்டரில் ஆற்று மண்ணை அள்ளிக் கொண்டிருந்த வி.எஸ்., நகரைச் சேர்ந்த விஜயகுமார் (28) என்பவரைக் குறித்து மேலவளவு காவல் நிலைய போலீசாருக்கு விஏஓ தகவல் தெரிவித்தார். 

உடனடியாக போலீசார் விஜயகுமாரை கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி