மதுரையில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: மூவர் மீது பாய்ந்த குண்டாஸ்

மதுரை மேலூர் அ.வல்லாளபட்டியைச் சேர்ந்த 19 வயது பெண்ணுடன் அதே ஊரைச் சேர்ந்த தீபன் ராஜுக்கு (25) பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை 2இல் இருவரும் தனிமையில் இருந்தபோது, தீபன் ராஜுவின் நண்பர்கள் மதன் (25), திருமாறன் (24) வரவே மூவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மேலுார் மகளிர் காவல் ஆய்வாளர் காஞ்சனாதேவி மூவரையும் கைது செய்தார். இந்த மூவரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி