தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது 48வது பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (நவ. 9) மேலூரில் அசைவ பிரியாணி விருந்து திருவிழா நடைபெற்றது. மேலூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள காஞ்சிவனம் மந்தை திடலில் நடந்த இந்த நிகழ்ச்சியை வணிகவரி அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் 20 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இளைஞரணி அமைப்பாளர் ரிஷி இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.