காப்பு கட்டிய பக்தர்கள் இன்று காலை கோவிலில் இருந்து புறப்பட்டு மண்கட்டி தெப்பகுளத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து, அலகு குத்தி, பறவை காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோவில் முன்பாக அம்மனுக்கு பொங்கல் வைத்து சாமி வழிபாடு செய்தனர்.
ஸ்ரீ சங்கிலி கருப்பு சாமி, பங்களா முனியாண்டி சுவாமி, அக்கினி மதுரை வீரன் சுவாமிக்கு பக்தர்கள் பூங்குழி இறங்கி தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். கோவில் முன்பு கிடா வெட்டி சாமியாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. நாளை (ஜூன் 4) காலை 7 மணி அளவில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வருவார்கள்.