மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் டங்ஸ்டனுக்கு எதிராக மாட்டுப் பொங்கல் நடைபெற்றது. டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கலை மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் நேற்று 'டங்ஸ்டன் எதிர்ப்புப் பொங்கல்' கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜன. 15) மாட்டுப் பொங்கலின் போதும் 'வேண்டாம் டங்ஸ்டன்', திட்டத்தை ரத்து செய் போன்ற வாசகங்கள் வரையப்பட்டு கிராம மக்கள் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.