மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருத்தபுளியம்பட்டியை சேர்ந்த அழகேசன் மகன் செந்தில்குமார் (35) என்பவருக்கு சிறிது நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டது. சிகிச்சை எடுத்தும் பலன் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இவர் நேற்று முன்தினம் (டிச. 23)இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி மணிமேகலை கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மேலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.