இந்த நிலையில், சிலா் தாங்கள் உயிருடன் இருக்கும் போதே தாங்கள் இறந்ததும் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்குவதாக ஒப்புதல் தருகின்றனா். இப்படி வழங்கப்படும் உடல்கள் பதப்படுத்தப்பட்டு தேவைப்படும்போது மாணவா்களுக்கு பாடங்கள் நடத்த பயன்படுத்தப்படுகின்றன.
உடல் தானம் இல்லாதபோது வகுப்புகளும் முழுமையடையாத சூழல் இருந்து வந்தது. இதையடுத்து, அடையாளம் தெரியாத, உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக பெறும் நடவடிக்கையில் அரசு மருத்துவமனை நிா்வாகம் இறங்கியது. இதன்படி அரசு மருத்துவமனையில் நோய் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் உடல்கள், உறவினா்களால் உரிமை கோரப்படாதவா்களின் உடல்கள் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக பெறப்படுகின்றன.
மேலும், சாலைகளில் இருந்து மீட்கப்படும் அடையாளம் காணப்படாத உடல்களும் காவல் துறையின் ஒப்புதலுடன் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக பெறப்படுகின்றன. இதே போல, கடந்த ஓராண்டில் மட்டும் 60 உடல்கள் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக பெறப்பட்டன.