மீனாட்சிஅம்மன் கோயிலில் சமபந்தி மற்றும் உடைகள் வழங்கும் விழா

பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சமபந்தி மற்றும் பொது மக்களுக்கு உடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு பி. மூர்த்தி அவர்கள் தலைமை வகித்தார். 

மேலும், இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் மு. பூமிநாதன், ஆ. வெங்கடேசன், மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல் தியாகராஜன் மற்றும் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி