மதுரையில் ரயில்வே ஓய்வூதியர்களுக்காக வாழ்வு நிலை சான்றிதழ் சமர்ப்பிக்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. முதுநிலை கோட்ட நிதி மேலாளர் கே. பாலாஜி துவக்கி வைத்த இந்த முகாமில், 'ஜீவன் பிரமான்' செயலி மூலம் 500க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் ஆதார் அடையாளங்களுடன் சான்றிதழ்களை சமர்ப்பித்தனர். ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற வருடந்தோறும் நவம்பர் மாதம் இந்த சான்றிதழ் சமர்ப்பிக்கப்படுகிறது.