கதவுகளுக்கு ஒட்டும் பேஸ்டுகளை போதை பயன்பாட்டுக்காக பயன்படுத்துவது தெரிய வந்ததால் சிறுவர்களுக்கு வழங்காமல் அனுப்பி வைத்துள்ள நிலையில் நேற்று அதிகாலை பீர் பாட்டில்களில் முழுவதுமாக பெட்ரோலை நிரப்பி வந்து கதவுகள் தயாரிக்கும் நிறுவனத்தின் மீது சிலர் வீசிவிட்டுத் தப்பியோடியுள்ளனர். இதில் பெட்ரோல் பற்றி எரிந்ததில் வாகனத்தின் மீது பட்டு டயர் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. போதைக்காக பயன்படுத்தி வந்ததை அறிந்த உரிமையாளர் பேஸ்ட் டப்பாக்களை தரமாட்டேன் என கூறியதால் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மூன்று சிறுவர்கள் பிடிக்கப்பட்டு கூடல்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்