இதேபோல், விவசாயிகள் எதிர்கொள்ளும் இழப்பை ஈடு செய்ய அவ்வப்போது அரசு பயிர்க் கடன் தள்ளுபடி அளிப்பதும் ஆறுதலாக உள்ளது. இந்த நிலையில், கூட்டுறவு சங்க பயிர்க் கடன்களுக்கு விவசாயிகளின் சிவில் அறிக்கை அவசியம் என கூட்டுறவுத் துறை பதிவாளர் உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது, தமிழகத்தின் வேளாண் உற்பத்தியில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். எனவே, இந்த சுற்றறிக்கையை தமிழக அரசு ரத்து செய்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.
பிஎஃப் பணம் இனி தானாகவே வங்கிக்கு வரும்