மேலும், முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகனச் சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டது. புத்தாண்டை வரவேற்கும் விதமாக கேளிக்கை விடுதிகள், உணவகங்களில் காவல் துறையிடம் கட்டாயம் முன் அனுமதி பெற்றே நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். புதன்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு மேல் கண்டிப்பாக எந்த கொண்டாட்டமும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டது.
மதுரை நகரம்
அடிப்படை வசதி வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை; கைது