பக்தர்களுக்கு ரோஸ்மில்க் வழங்கிய இஸ்லாமியர்கள்

மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் சித்திரை திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு ரோஸ்மில்க் வழங்கிய இஸ்லாமியர்கள்.

சித்திரை திருவிழாவில் அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்.

மதுரை உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் அம்மனும் சுவாமியும் மாசி வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.

இந்நிலையில் 4ம் நாள் திருவிழாவில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளிய மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரரை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

பக்தர்களின் கலைப்பை போக்கும் வகையில் மத நல்லிணக்கத்தோடு மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற முகையதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சார்பில் பக்தர்களுக்கு ரோஸ் மில்க் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது

கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் குளிர்பானங்கள் வழங்கி தாகம் தீர்த்த சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா என்பது மதங்கள் கடந்த ஒற்றுமையை ஓங்கிசொல்லும் விழாவாக கொண்டாடப்படுவதற்கு இது சாட்சியாக அமைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி