பேசிக்கொண்டிருக்கும்போதே 7ஆம் வகுப்பு படிக்கும் விஷ்வா என்ற மாணவன் ”தலை வலிக்கிறது, மயக்கம் வருகிறது” என கூறிய உடன் அமைச்சர் உடனடியாக அந்த மாணவனை தனியாக அமரச்செய்து அவனுக்கு இனிப்பும், உணவும் வழங்கிடச் சொன்னார். அவனிடம் உரையாடிய அவனது குடும்ப சூழ்நிலையை பின் கேட்டறிந்தார்.
அமைச்சர் அவனை மருத்துவ பரிசோதனை செய்யவேண்டுமென அங்குள்ள ஆசிரியர்களிடமும் தனது அலுவலக பணியாளர்களிடம் அறிவுறுத்தினார். பின்னர் அவர் அறிவுறுத்தலின் பேரில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டது.
எனக்கு சைக்கிள் வேண்டுமென கேட்டார்,
நான் உனக்கு சைக்கிள் வாங்கித் தருகிறேன்" என்று கூறினார்
இந்த நிலையில் மாணவனை 2 நாட்களுக்கு முன் அவனை தனது இல்லத்திற்கு அழைத்து வந்து சர்ப்ரைஸ் ஆக புதிய சைக்கிள் ஒன்றை பரிசளித்து மகிழ்ந்தார் அமைச்சர்.