அப்போது பேசிய மகேஷ்பாண்டியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள்: முதலமைச்சர் பிறந்தநாள் எனக்கூறி வாரந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி இளைஞர்களை கொன்று குவிக்கிறார்கள். முதலமைச்சரின் பிறந்தநாள் ஜல்லிக்கட்டு போட்டி பாதுகாப்பாக நடைபெறும் என கருதி தான் எனது அண்ணன் போட்டிக்கு சென்றான். ஆனால் எங்கள் அண்ணன் உயிரிழந்து விட்டார். முதலமைச்சர் பிரியாணியை சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.
நாங்கள் பச்சை தண்ணீர் கூட இல்லாமல் அண்ணனை இழந்து தவிக்கிறோம், எங்களுக்கு விஷம் கொடுத்து கொன்று விடுங்கள் என வேதனையை தெரிவித்தனர். எங்களுக்கு ஏதேனும் இழப்பீடு தர வேண்டும் எனவும் தெரிவித்தனர். முதலமைச்சர் பிறந்தநாள் என்றால் எவ்வளவோ போட்டிகள் இருக்கும் போது வாரந்தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி இளைஞர்களை கொன்று குவிப்பது ஏன் என பெண்கள் கேள்வி எழுப்பினர்.