இதனை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கி வாழ்த்துரை வழங்கி பேசினார். தொடர்ந்து 'கலைமாமணி' நாகை முகுந்தன் 'கோதையும் கோபாலனும்' என்கிற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். 27ஆம் தேதி மகா பெரியவர் ஆராதனை வைபவத்தை முன்னிட்டு, காலை 9 மணிக்கு 'காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர்' விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், மகன்யாஸம், புஷ்பாஞ்சலி, சிறப்பு அர்ச்சனையும் நடக்கிறது. பிரார்த்தனைகளுக்காக அர்ச்சனையில் பங்குபெற்று பிரசாதம் பெற்றுக் கொள்ள விரும்பும் பக்தர்கள் ரூ.500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Motivational Quotes Tamil