இதில் ஏராளமான சிறுவர்கள், பெண்களும் தொழுகையில் கலந்துகொண்டனர். சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட பின்னர் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். தொழுகையின் முடிவில் இஸ்லாமிய பேச்சாளர்கள் பக்ரீத் பண்டிகையின் நடைமுறைகள் மற்றும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்ததோடு உலக நன்மை வேண்டி சிறப்பு துஆ செய்தனர்.
இதனை தொடர்ந்து இறைவனுக்காக தங்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் ஆடுகளை அறுத்து அதன் இறைச்சிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி தியாகத் திருநாள் கடமையை நிறைவேற்றினர்.