காலை 10 மணி முதல் 11 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெறுவார் என்பதால் மனுக்களை அளிப்பதற்காக பதிவு செய்யப்பட்ட மனுக்களை கையில் வைத்திருந்தபடி பொதுமக்கள் காலை 10 மணி முதல் காத்திருந்தனர். ஆனால் காலை 12 மணியான நிலையில் மனுக்களை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பெற நடவடிக்கை எடுக்காத நிலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அனைவரும் கால்கடுக்க காத்திருந்தனர். மாவட்ட ஆட்சியர் சங்கீதா கடந்த வாரம் குறைதீர் கூட்டங்களில் பெற்ற மனுக்கள் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் 12 மணி வரை ஆலோசனை நடத்தியதாகவும், இதனால் ஒரே நேரத்தில் மனு அளிக்க பொதுமக்கள் சென்றதால் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு