இந்நிலையில் திமுக அரசின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதி எண் பழைய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய புதிதாக மீண்டும் அமைத்த மூவர் குழுவைத் திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமுல்படுத்திட வேண்டும், பணிக்கொடை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கம், சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற பாதாகைகள் ஏந்தப்பட்டன. முழக்கங்களும் எழுப்பப்பட்டன. ஆட்சியர் அலுவலக வாயில் வரை பேரணியாக வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?