மதுரை: ஆம்னி பேருந்து ஓட்டுனர் உயிரிழப்பு

மதுரை எம். ஜி. ஆர். பேருந்து நிலையத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தவரின் உடலை மாட்டுத்தாவணி போலீசார் மீட்டு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மேல மறவன் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த வேலு மகன் செபஸ்தியன் துரை (55) என்பது தெரியவந்தது. ஆம்னி பேருந்து ஓட்டுநராக இவர் பணியாற்றினார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊரிலிருந்து புறப்பட்டு வந்திருந்தார் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப் பதிந்து அவரது உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி