வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளுக்கும் வழக்கமாக கட்டில், பீரோ, குத்துவிளக்கு, அண்டா, ரொக்கப்பரிசு உள்ளிட்டவைகள் வழங்கப்படும். ஆனால் இந்தாண்டு பரிசுகள் வழங்கப்படவில்லை. பாரம்பரிய முறைப்படி காளைகளுக்கும் வீரர்களுக்கும் வேட்டித்துண்டு மட்டுமே வழங்கப்பட்டது. 30 நிமிடத்திற்கு ஒரு சுற்று என கணக்கிட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஜல்லிகட்டு விழாவை முன்னிட்டு மதுரை ஊமச்சிகுளம் டி.எஸ்.பி சந்திரசேகரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை நான்காவது சுற்று முடிவில் இதுவரை 17 பேர் காயமடைந்துள்ளனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்