இந்தப் பொருள்காட்சியை இதுவரை 1.53 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். ரூ.21.60 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும் 20 நாள்களுக்கு தொடர்ந்து இந்தப் பொருள்காட்சி நடைபெறவுள்ளது. பொருள்காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறார்களுக்கு ரூ.10-ம் வசூலிக்கப்பட்டது. இனிவரும் நாள்களில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணச் சலுகைகள் அளிக்கப்படவுள்ளன.
இதன்படி, பள்ளி அடையாள அட்டையுடன் வரும் மாணவ, மாணவிகளுக்கு நுழைவுக் கட்டணமாக ரூ.5 மட்டுமே வசூலிக்கப்படும். இதேபோல், ராட்டினங்களுக்கான கட்டணத்திலும் 20 சதவீதம் விலக்கு அளிக்கப்படும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார்.