மதுரை: சாலையோரத்தில் மின்சார ட்ரான்ஸ்பார்மர் அருகே தீ விபத்து

மதுரை மாநகர் திருப்பாலை டிஎன்இபி காலனி அருகே நேற்று இரவில் திடீரென மின்சார ட்ரான்ஸ்பார்மர் அருகே தீ பற்றி இருந்த நிலையில் அருகில் உள்ள பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்பு துறை காவல் துறையினர் அங்கு புதர்மண்டி கிடந்த பகுதியில் உள்ள மரங்களில் தீ பரவி எரிந்த நிலையில் அதனை தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயானது அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவிய நிலையில் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மருக்கு தீ பரவாத நிலையில் நல்வாய்ப்பாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

திருப்பாலை நத்தம் பறக்கும் பாலத்தின் கீழ் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை மூட்டமானது நத்தம் பறக்கும் பாலம். மற்றும் சாலை முழுவதிலும் பரவியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் முழுவதுமாக தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் போக்குவரத்து சீரானது

மதுரை திருப்பாலை பகுதியில் மின்சார ட்ரான்ஸ்ஃபார்மர் அருகே ஏற்பட்ட தீ விபத்தால் சிறிதுநேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி