இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, 17 ஆண்டுகளாக மாநகராட்சியில் குப்பைகழிவுகளை அகற்றும் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருவதாகவும், தற்போது தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு கீழ் ஓட்டுநர்களாக பயன்படுத்தப்பட்டு தினமும் பணி செய்து வருகின்றோம். இந்த நிலையில் ஒப்பந்த நிறுவனமும் உரிய விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது இல்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து, நாங்கள் குப்பை அள்ளும் வாகனங்களை ஓட்டும் போது பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதாகவும், முறையான உபகரணங்கள் கொடுக்காமல் இருப்பதால் பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கும் ஆளாகி வருகிறோம் என்ற மனவேதனையும் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து