மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார் இன்று (31.07.2025) மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சி மண்டலம்-4 மாநகராட்சி பழைய அலுவலகத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மற்றும் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு. பூமிநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்