பின்னர் காரில் கடத்தப்பட்ட செந்தில்வேல் மற்றும் ஓட்டுனர் லெட்சுமணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் மீட்டனர். இதனையடுத்து செந்தில்வேலை கடத்தியதாக அவரின் உறவினரான ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்களான மதுரையைச் சேர்ந்த கௌதம், மாரிமுத்து மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். அப்போது காவல்துறையினரிடம் தப்ப முயன்ற கௌதம் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து ராஜ்குமார், மாரிமுத்து, ஸ்ரீகாந்த் ஆகிய மூவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டதால் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதி