சோழவந்தான்: குடிபோதையில் மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தை கைது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கீழமட்டையானை கிராமத்தில் விறகு வெட்டும் தொழிலாளி ஒருவர், குடிபோதையில் தனது 3 வயது மகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் தாய் காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, நேற்று மாலை (ஜூன் 3) போதை நபரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி